போபால், மார்ச் 4- ஒன்றிய அரசின் 78 துறைகளில் 9.64 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன; இவை, இந்தியா அணி ஆட்சிக்கு வந்ததும் நிரப்பப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “ஒன்றிய அரசின் 78 துறைகளில் 9.64 லட்சம் பணி யிடங்கள் காலியாக உள்ளன. பொய் வாக்குறுதிகள் கொடுத்து பிரதமரானவரின் அலுவலகத்தி லேயே பல முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளன. பணிப் பாது காப்புடன் கூடிய நிரந்தர பணியிடங் களை ஒரு சுமையாக பாஜக கருது கிறது. தொடர்ச்சியாக, ஒப்பந்த அடிப் படையில் ஊழியர்களை பணிக்கு எடுப்பதில் கவனம் செலுத்தி வரு கிறது. அரசுப் பணியிடங்கள் இளை ஞர்களின் உரிமை. அதனை நிரப்பு வதற்கு வலுவான திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும், அரசு பணியிடங்கள் என்ற மூடப் பட்ட கதவுகளை இளைஞர்களுக் காக திறப்போம். வேலை வாய்ப்பின்மை என்ற இருளில் இருந்து இளைஞர்களை வெளியே கொண்டு வருவோம்” என ராகுல் காந்தி கூறியுள்ளார்.